சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Thursday 5 July 2012
வலிகள் புதிது....!
ஆயிரம் நாட்கள் அழிந்த மனதில்
அன்பு சொரிந்து அமிர்தமிட்டாய்...
முதல் துளிர் முளை விடும் போது....
முன்பனியில் விசமிட்டு ஏன் தெளித்தாய்........!
Read more »
Tuesday 3 July 2012
அறிவாயா அடுத்தவன் வலி ...!
கண்ணீருக்கே நான்
சொந்தமாகிப்போனதால்
விழிகளின் நடுவே
சமாதி கட்டுகிறேன்...
உணர்வுகள்
மலர் வளையங்களாய்..
தலைகோதி விடுகின்றன...
சுவாசக்காற்றில் கற்பூர வாசனை...!
Read more »
மேகமாய் நானும் .....!
நீ அறியாய்
உன்மீது விழுந்த
மழைத்துளி காயுமுன்னே
மழை தந்த மேகம்
மலையோடு மோதி
மரணிப்பதைப் போல
நானும் அன்பு தந்து
அழிந்து போனவன் என்று ...!
ப்ரியமுடன் சீராளன்
உனக்கும் காதல் வரும் ...!
உனக்கும் காதல் வரும்
உயிரை குடிக்கும் பொழுதிலும்
உண்மையாய் காதலிப்பாய்...
வேற்றுக்கிரகத்திலும் இடம் தேடுவாய்..
கனவிலே கட்டுவாய் தாஜ்மஹால்
பிரிவுகள் நிரந்தரமாய் போனாலும்...
பிரியாத நினைவுகளோடு...
மீண்டும் சுவாசிப்பாய்....!
Read more »
அறிந்தும் அறியாமல்....!
மழையில்
நனைந்தவனைவிட
பனியில்
நனைந்தவனுக்கே குளிர் அதிகம்
அப்படித்தான்......
பணத்தில்
திளைத்தவனை விட
ஏழ்மையில்
களைத்தவனுக்கே காதல் அதிகம்...
இதை நீ
அறிவாயா இல்லை
அறிந்தும் ஆடம்பரத்துக்காய்
அறுத்து விட்டுப் போனாயா....!
ப்ரியமுடன் சீராளன்
Monday 2 July 2012
ஒரே நாளில்...!
நீ எங்கே என்று
இதுவரை தேடியதில்லை...
என் உயிருக்குள்ளே...
ஊஞ்சல் கட்டி...
உன்னை தாலாட்டியதால்...
நீ எங்கே என்று
இதுவரை தேடியதில்லை..!
Read more »
எது வாழ்க்கை....!
காதலை காதலிப்பதால்
மனிதன் பூரணமடைகிறான்
வாழ்வை காதலிப்பதால்
புனிதமடைகிறான்
இரண்டையும் காதலிப்பவன்
இதயத்தோடு வாழ்கிறான்....!
ப்ரியமுடன் சீராளன்
இதயத்தின் இடிபாடுகள்....!
நான் தேடும் கூடுகள்
இன்னும் கட்டப்படவில்லை...
மரங்கள் மண்ணோடு
புதைந்து போனதால்............!
Read more »
ஷகியே...!
வலமிருந்து இடமாய்
மாறிச்சுழலும்
வாழ்க்கை கடிகாரம் ......!
Read more »
நிதர்சனம்..!
சாட்சிகள் வைத்து
பூக்கள் பூப்பதில்லை -அது
வாடகைக்கு வாசம் சேர்ப்பதில்லை....!
Read more »
ஒரு நதி அழுகிறது
வைகைக் கரைகளிலே
வந்துபோன புன்னகைகள்
வயது வரா காதலுடன்
வழிமாறி போன ..
ஞாபகத் தடயங்கள்...!.
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)