சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday 3 January 2013

புரியவில்லை புலன்களுக்கு ...!


வார்த்தையொன்று கவிதையாகி 
வாழ்வில் வந்தது 
சேர்க்கையற்ற  வெறுமை தந்து 
தேகம் சுட்டது..!

Wednesday 2 January 2013

இதயத்தின் இரேகைகளில்...!


விழிகள் பரப்பிய 
திசைகள் எல்லாம் 
விதைத்த நம் வேதனைகள் 
வேருக்குள் பூக்கையிலும் 
வாசம் சுமக்கும்..!

Sunday 30 December 2012

ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்..!


பிறக்கும் இந்த வருடத்தை 
பீதியுற வைத்த மாயன் 
இறக்கும் நிலை என்றெண்ணி 
இன்பமற்றோர் மனம்குளிர 
வந்துவிட்ட நன்னாளில் 
வலியறுந்து அகமகிழ 
வாஞ்சை யோடும்மை 
வாழ்த்தி நிற்கின்றேன் 
இனியில்லை அழிவென்று 
இன்புற்று வாழுங்கால் 
அகம்பாவம்,ஆணவங்கள் 
அடிபணியா கர்வங்கள் 
அனைத்தையும் அழித்திங்கே 
அகிலத்தை செழிப்பாக்கி 
அன்புநெறி தளைத்தோங்க 
இறைதூதர் தந்தளித்த 
மறைநூலை மனதேந்தி 
நிறைசெல்வ செழிப்போடு 
வாழ்கவென வாழ்த்துகிறேன்...!

பிரியமுடன் வாழ்த்தும் சீராளன்